• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

இலங்கை

திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, 6 மாதங்களுக்கும் அதிகமான 3 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு திரிபோசா வழங்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளே அதிகமாக போசனை குறைபாட்டிற்கு உள்ளாகி வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply