• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜேர்மனியில் நடைபெற்ற மாம்பழத்திருவிழாவில் பல யூரோக்களுக்கு விற்கப்பட்ட மாம்பழம்

தமிழர்களின் அங்காடிகளில் மாம்பழங்கள் பல விலைகளில் விற்பனைக்கு இருந்தாலும், ஜெர்மனிய ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத்திருவிழாவின் முடிவில், ஏலத்தில் விடப்பட்ட மாம்பழமொன்று 1050 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.

இதேபோன்று சமீபத்தில் வவுனியாவில் உள்ள உக்குலாங்குளம் பிள்ளையார் கோவிலில் ஏலத்தில் மாம்பழமொன்று 162,000 ரூபாய்க்கு (500 யூரோ) விற்பனையாகியது.

அதேவேளை இதே பகுதியிலுள்ள மற்றொரு கோவிலில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ஒரு மாம்பழம் 95,000 ரூபாய் (300 யூரோ) விலைக்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் ஜெர்மனி, கும்மெர்ஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சிகுமாரன் கோவிலில் நடந்த ஏலத்தில் தொடக்க விலை 25 யூரோவாக இருந்தது, இறுதியில் மாம்பழம் 1050 யூரோ விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முழு வருமானமும் கோவிலின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply