• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த சந்திரிகா

இலங்கை

நேற்யை தினம் தனது 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “தன்னை நினைவில் வைத்து வாழ்த்துத் தெரிவித்தமைக்காக நாட்டு மக்களுக்கு நன்றியைத்” தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ” இன்று நான் இந்த பூமியில் 79 ஆண்டுகளைக் கடந்து 80 ஆவது வருடத்திற்குள் நுழைகின்றேன்.

நான் எனது நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு விடயங்களைச் செய்துள்ளேன். நேற்றைய நாள் முழுவதும் கிடைத்த வாழ்த்துக்கள் மூலம் என்னை இந்த நாட்டு மக்கள் மறக்கவில்லை எனத் தெரிகின்றது. இதனை நான் மிகவும் பெருமையாக நினைக்கின்றேன்.

இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் என் இதயத்தில் நீங்காத உண்மையான அன்பு உள்ளது.  அதேவேளை நாட்டிற்காக எனது கடமையைச் செய்ய உங்கள் அன்பு எனக்கு அதிகாரம் அளித்துள்ளது என்று நான் இன்றும் நம்புகிறேன்.

அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply