• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அரச  நியமனத்தினை வழங்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும் அவர்களுக்கான அரச நியமனங்கள் தொடர்பாக அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பாராமுகமாக இருப்பதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த போராட்டத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டதுடன் பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிழலக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கலந்துகொண்டதுடன் ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரியும் கலந்துகொண்டிருந்தார்.

Leave a Reply