• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையைத் திறந்து வைத்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமுண தேசிய பூங்கா ஊடான கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை விசேட பூஜைகளுடன் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்  தொண்டமான் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த காட்டுப் பாதையில் பாதையாதிரிகளுக்காக மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply