![](https://tamilsguide.com/newsimg/2d24e_tamilsguide-tikoger.jpg)
தயாசிறி ஜயசேகர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து மைத்திரிபால சிறிசேன மற்றும் சிலருக்கு எதிராக தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த மனுவின் உத்தரவை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.