• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இன்று கறுப்புக் கொடிப் போராட்டம்

இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத்  தெரிவித்து  இன்று கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு  குறித்த போராட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply