• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதல் திருமணம் செய்தவர்களுக்கு குற்றவரி

இலங்கை

நாடுகளுக்கு நாடு வரி அறவிடும் முறைமை வேறுபடும். ஆனால் தமிழகத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் ‘குற்ற வரி’ செலுத்தும் நடைமுறை தற்போதும் அமுலில் உள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் காதல் திருமணம் செய்தவர்கள் ‘குற்ற வரி’ செலுத்தாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கும் நடைமுறை தமிழ்நாட்டு கிராமத்தில் இன்னமும் உள்ளது.

கோவை மாவட்டம் அருகே, காதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு குற்றம் செய்ததற்கான ‘வரி’ விதிக்கப்படுவதுடன், அதைச் செலுத்தாவிட்டால் ஊரை விட்டுத் தள்ளி வைக்கும் முறை நடைமுறை இன்னமும் உள்ளது.

இதைக் 'குத்தவரி' என்று அவர்கள் அழைக்கிறார்கள். இந்த நடைமுறை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் நடைமுறை அக்கிராம மக்கள் கூறுகின்றனராம்.

அதோடு காதல் திருமணம் செய்வோரை கிராமத்தில் இருக்கும் சாதிய தலைவர்கள் ஒதுக்கி வைப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதுமட்டுமின்றி, காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு ‘குத்தவரி’ (குற்றம் செய்ததற்கான வரி) செலுத்தினால் ஊரினுள் சேர்த்துக் கொள்ளும் வினோத நடைமுறை இருப்பதாகவும் புகார் எழுந்தது.

அன்னூரில் இருந்து 5 கி.மீ. தொலைவு பயணித்து வடக்கலூர் கிராமம். இங்கு சுமார் 220 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்தில் 95 சதவீதம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் வசித்து வருகின்றனர்.

ஊரினுள் இந்தச் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் நிர்வகிக்கும், கருப்பராயன் கோவில் உள்ளது. மேலும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் காதல் திருமண ஜோடிகள், இந்தக் கோவிலுக்குள் நுழையக்கூடாது என சாதிய தலைவர்கள் மிரட்டுவதாகவும் கூறபடுகின்றது.

காலங்கள் மாறினாலும் இன்னும் பழமைவாதிகளாக சாதிவெறிபிடித்த சிலர் இருப்பது ஆச்சர்யம் தான். 
 

Leave a Reply