• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை

இலங்கை

இன்று (புதன்கிழமை) பிற்பகல் நடத்தப்படவிருந்த ஆசிரியர் – அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஜோசப் ஸ்டார்லின், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க உள்ளிட்ட உறுப்பினா்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செரமிக் சந்தியிலிருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரையான வீதியையும், என்.எஸ்.ஏ சுற்றுவட்டத்திலிருந்து சாரணர் மாவத்தை வரையான கல்லுப்பார வரையிலான வீதியையும் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை வீதிகளை தடை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த உத்தரவு அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமையில் தலையிடாது என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிாியா் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply