• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துபாய் நட்சத்திர ஓட்டலில் துணியை உலர வைத்த இந்திய பெண்- வீடியோ

சினிமா

இந்தியாவை சேர்ந்த பல்லவி வெங்கடேஷ் தனது தாயாரை துபாய் அழைத்துச் சென்று புகழ்பெற்ற 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தார். அங்கு வழக்கமான குடும்பப் பணிகளை கவனித்த தாயார், இந்தியாவில் செய்வதைப்போல நட்சத்திர ஓட்டலின் பால்கனி பகுதிக்கு சென்று கம்பியில் துணியை உலர வைக்கப் போனார். ஆனால் அங்கு அப்படி துணியை உலர்த்துவது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். சிறு குழந்தைகள் செய்யும் சுட்டித்தனத்தை பெற்றோர் ரசிப்பதுபோல, தாயார் அறியாமையால் செய்த இந்த செயலை ரசித்துப் பார்த்த பல்லவி, அதை வீடியோவாக பதிவு செய்துகொண்டார்.

இங்கே இப்படி துணியை உலர்த்தக்கூடாது என்று சொல்லியபடியே மற்ற தளங்களையும் காட்டி படம்பிடிக்கிறார். பலநூறு அறைகள் கொண்ட அந்த பிரமாண்ட ஓட்டலில் மற்றொரு தளத்திலும் யாரோ துணியை பால்கனியில் உலர்த்தி இருப்பது காட்டப்படுகிறது.

இந்த வீடியோவை பல்லவி வலைத்தளத்திலும் பகிர்ந்தார். அந்த வீடியோ ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். லட்சக்கணக்கானவர்கள் விருப்பப் 
 

Leave a Reply