அமெரிக்காவின் எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீன ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூண்ட சூழலில், சீனா மறைமுகமாக ஈரானுக்கு ராணுவ உதவிகளை வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, ரேடார்களில் சிக்காமல் பறக்கும் ‘ஸ்டெல்த்' தொழில்நுட்பம் மற்றும் அதிதூர இலக்குகளைக் கண்காணிக்கும் ரேடார் அமைப்புகளை ஈரானுக்கு சீனா வழங்கியதாக நம்பப்படுகிறது.
























