விமான சேவைகள் குறித்து எயார் பிரான்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டுள்ள காரணத்தினால், துபாய், ரியாத் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவை இடைநிறுத்தத்தை எயார் பிரான்ஸ் (Air France) நிறுவனம் மேலும் நீட்டித்துள்ளது.
துபாய் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் மார்ச் 31 வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
டெல் அவிவ் மற்றும் பெய்ரூட் ஆகிய நகரங்களுக்கான சேவைகள் ஏப்ரல் 4 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஏனைய முன்னணி விமான நிறுவனங்களும் தங்களது சேவைகளை ரத்து செய்துள்ளன.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways): துபாய், டெல் அவிவ் உள்ளிட்ட இடங்களுக்கான சேவைகளை மே 31 வரை நீட்டித்துள்ளது.
லுஃப்தான்சா (Lufthansa): ஏப்ரல் நடுப்பகுதி வரை தனது பெரும்பாலான சேவைகளை ரத்து செய்துள்ளது. KLM: துபாய் மற்றும் ரியாத் போன்ற இடங்களுக்கான சேவைகளை மே 17 வரை இடைநிறுத்தி வைத்துள்ளது.
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள், தங்களது பயணச் சீட்டுகளை (Tickets) எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி மாற்றி அமைத்துக்கொள்ள அல்லது முழுமையான பணத்தைத் திரும்பப் பெற (Refund) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் தங்களது விமான நிறுவனத்தின் இணையதளம் அல்லது கைபேசி செயலி மூலம் விமானத்தின் நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதால், இந்தத் தடைகள் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.






















