• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல் தான் முதல் இலக்காக இருந்திருக்கும் - ட்ரம்பின் கருத்தால் சர்ச்சை

நான் இல்லையென்றால், இஸ்ரேல் என்ற நாடு இருந்திருக்காது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

நெதன்யாகுவை போனில் வறுத்தெடுத்த ட்ரம்ப் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஈரான் மீதான போருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்னை இழுத்துவிடவில்லை.

ஈரான் அணுஆயுதம் வைத்திருக்கக்கூடாது என்பதால் தான் இந்தப் போரை துவங்கினேன். ஈரான் அணு ஆயுதம் பெற்றிருந்தால், அந்நாட்டிற்கு இஸ்ரேல் தான் முதல் இலக்காக இருந்திருக்கும்.

நான் மட்டும் இல்லை என்றால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது. ஈரானுடன் ஒபாமா செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்தத்தை நான் ரத்து செய்ததில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கின இவ்வாறு ட்ரம்ப் கூறினார்
 

Leave a Reply