• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை

சஜித் பிரேமதாஸ அமைச்சராக இருந்த காலத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த மக்கள் சிலர் இன்றைய தினம் கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2018ம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டமானது.

இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் தமது நகைகளை அடகு வைத்து தங்களுடைய பணத்தில் ஓரளவு பூரணப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தற்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்படுடுகின்ற நிலையில் அதனுள் தங்களை உள்வாங்கி தமது வீட்டுத்திட்ட மிகுதி பணத்தை வழங்குமாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் கையளித்திருந்தனர்.
 

Leave a Reply