• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி

இலங்கை

2025-2027 உலக டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இன்று மாலை (04) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்தியபொருளாதாரம்

முதல் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இரண்டாவது போட்டி கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டு மன்ற (S.S.C.) மைதானத்தில் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 5ஆம் இடத்திலும், இலங்கை 6ஆம் இடத்திலும் இருப்பதால், இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானவை.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆயத்தப் பணியாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் கொழும்பில் உள்ள NCC மைதானத்தில் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை ஒரு பயிற்சிப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply