போரின் போது நெதன்யாகு ரகசியமாக UAE பயணம் - வெளிவந்த முக்கிய தகவல்
இலங்கை
ஈரானுடனான போரின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரக (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை ரகசியமாக சந்தித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் “சிங்கத்தின் கர்ஜனை” நடவடிக்கையின் போது இந்த ரகசிய பயணம் இடம்பெற்றதாகவும், அதன்போது இரு தலைவர்களும் முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இஸ்ரேல் தூதர் மைக் ஹக்கபீ, ஈரானுடனான போரின் போது இஸ்ரேல் தனது அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அவற்றை இயக்கும் பணியாளர்களையும் UAE-க்கு அனுப்பியதாக தெரிவித்ததற்கு ஒரு நாள் பின்னர் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
ஹக்கபியின் கருத்துகளை நேரடியாக உறுதிப்படுத்தாவிட்டாலும், நெதன்யாகுவின் அலுவலகம் இந்த பயணம் “இஸ்ரேல்–ஐக்கிய அரபு அமீரக உறவுகளில் ஒரு வரலாற்று திருப்புமுனையை குறிக்கிறது” என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிகழ்வு மத்திய கிழக்கு அரசியல் சூழலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
























