கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு
இலங்கை
கொழும்பு மாநகர சபை இன்று (23) முதல் தனது அதிகார வரம்பு முழுவதும் வாகன தரிப்புக் (vehicle parking) கட்டணத்தை வசூலை மீண்டும் தொடங்கியுள்ளது.
அதன்படி, இன்று காலை 6:00 மணி முதல் கட்டண வசூல் பணிகள் மீண்டும் வழக்கமான கால அட்டவணைக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
நகரம் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் காணப்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வாகன வரிசைகள் காரணமாக மார்ச் 18 முதல் வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், எரிபொருள் QR குறியீடு அடிப்படையிலான முறை நடைமுறைப்படுத்தப்பட்டதாலும், வாகனப் பதிவு எண்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாலும், எரிபொருள் வரிசைகளின் நீளம் கணிசமாகக் குறைந்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து நிலைமை சீரடைந்துள்ளதால், வழக்கமான வாகன நிறுத்துமிடக் கட்டண முறையை மீண்டும் அறிமுகப்படுத்த தீர்மானித்ததாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.























