நவம்மஹர ரயில் கடவையில் திடீர் மாற்றம்
இலங்கை
பிரதான ரயில் பாதையில் உள்ள ஹொரப்பே உப ரயில் நிலையத்திற்கு அருகில், 08ஆவது மைல்கல் 05 சங்கிலித் தொலைவு பகுதியில் அமைந்துள்ள “நவம்மஹர” ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாக, குறிப்பிட்ட சில நாட்களில் அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, போக்குவரத்து கட்டுப்பாடுகள் பின்வருமாறு விதிக்கப்பட்டுள்ளன:
2026/06/05 அன்று: முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை – வாகனப் போக்குவரத்து பகுதியளவில் மட்டுப்படுத்தப்படும்.
2026/06/06 அன்று: முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை – வாகனப் போக்குவரத்து முழுமையாகக் மட்டுப்படுத்தப்படும் .
2026/06/07 அன்று: முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை – வாகனப் போக்குவரத்து பகுதியளவில் மட்டுப்படுத்தப்படும்.இந்த அத்தியாவசிய புனரமைப்புப் பணி காரணமாக, இந்த ரயில் கடவையைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதோடு, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.






















