• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிபொருள் விலை நெருக்கடி - தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு

இலங்கை

மத்திய கிழக்கு நெருக்கடியின் பின்விளைவுகளைச் சமாளிக்கும் வகையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு மேலும் 500 தொன் டீசல் நுகர்வை அவசரமாகக் குறைக்க வேண்டும்.

ஆனால் அதற்கான குறிப்பிட்ட நடவடிக்கை எதுவும் இதுவரையும் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

ஏனைய பல நாடுகளைப் போலவே, இலங்கையும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் போராடி வருகிறது.

கியூஆர் குறியீட்டு முறையின் கீழ் விநியோகம் சீரமைக்கப்பட்ட பின்னர் தினசரி டீசல் நுகர்வு சராசரியாக சுமார் 4200 தொன்களாக உள்ளது.

அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காக, இந்த நுகர்வை மேலும் குறைந்தபட்சம் 500 தொன்கள் குறைக்க வேண்டும்.

இருப்பினும், இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட நடவடிக்கையையும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு போரின் விளைவாக உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் மாதாந்திர எரிபொருள் இறக்குமதிச் செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

இது நாட்டின் கையிருப்பு மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் ஏற்கனவே 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. 

அமெரிக்க டொலருக்கான தேவை அதிகரித்ததன் விளைவாக ரூபாயின் மதிப்பும் பலவீனமடைந்துள்ளது. 

இருப்பினும், சர்வதேச நாணய நிதியம் (IMF), நாணய மாற்று விகிதத்தில் நெகிழ்வுத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. 

மேலும், இந்த நேரத்தில் எந்தவொரு இறக்குமதி கட்டுப்பாட்டையும் விதிக்க வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, உலகச் சந்தையிலிருந்து விநியோகம் பெறப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த நேரத்தில் எரிபொருளைச் சேமிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வழிகளைப் பரிசீலித்து வருவதாக ஓர் உயர் அதிகாரி தெரிவித்தார். 

அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியும் பரிசீலனையில் உள்ள ஒரு வழிமுறையாகும்.
 

Leave a Reply