• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ.ஸ்ரீபதி இன்று பதவியேற்பு

இலங்கை

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக ஜெ. ஸ்ரீபதி இன்று உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார கலந்துகொண்டு, புதிய மேலதிக அரசாங்க அதிபருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் அவரை வரவேற்றிருந்தார்.

2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஜெ.ஸ்ரீபதி, இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்தை சேர்ந்தவராவார்.

இதற்கு முன்னர் குச்சவெளி உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் கொண்ட ஜெ. ஸ்ரீபதி மாவட்டத்தின் காணி நிர்வாகம் மற்றும் அது சார்ந்த அபிவிருத்திப் பணிகளை இனிவரும் காலங்களில் முன்னெடுத்துச் செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply