இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல்
இலங்கை
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு உதவி, உடந்தையாக இருந்ததாகவும் அவருக்கு தங்குமிடம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு நபரை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னர் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (07) கொழும்பு குற்றப் பிரிவு (CCD) அதிகாரிகளால் கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேக நபர்களை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.






















