• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோத அரிசி பதுக்கல் - அதிரடி நடவடிக்கை

இலங்கை

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5,000 அரிசி பொதிகள் வெளிப்படையான ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் 6.3 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சட்டவிரோத பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்தச் செயல்முறை ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

நுகர்வோரை ஏமாற்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முயலும் மோசடியாளர்களைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் சந்தையில் நியாயமான வர்த்தக நடைமுறைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply