• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியை இன்று

இலங்கை

யாழ்,  நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது, உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து, படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும், கடற்படை சிறப்பு மாலுமியான குருநாகல் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ரத்நாயக்க என்பவரே உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள் நேற்று அன்னாரில் இல்லத்தில் இடம்பெற்றது. இதில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இதேவேளை அன்னாரின் இறுதிக் கிரியைகளில் யாழ். மாவட்டத்தில் இருந்து கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிககளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply