• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தனபாலசிங்கம் இரத்தினம்

தோற்றம் 08 AUG 1951 / மறைவு 10 MAY 2025

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இரத்தினம் அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பூரணம் தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்கேஸ்வரி, தனரூபி, சிவரூபன், இதயரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜ்குமார்(Marcus), ரெஜிகுமார், சைலஜா, தஷ்சணகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கௌஷல்யா, அபிநயா, சியாம், மிதுன், வருண், அகர்ணி, மகிழினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரமேஸ்வரி, வடிவுக்கரசி, சிவப்பாக்கியம், ராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(புங்குடுத்தீவு), காலஞ்சென்ற யோகலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற பரமலிங்கம்(பிரான்ஸ்) மற்றும் நாகரத்தினம்(கிளி- கிளிநொச்சி), புஷ்பலிங்கம்(பிரான்ஸ்), தங்கரத்தினம்(யாழ்ப்பாணம்), வரதா(பிரான்ஸ்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

காலஞ்சென்ற புண்ணியலட்சுமி மற்றும் செல்வரத்தினம், சிவப்பாக்கியம், அருணாம்பிகை, கலையரசி, காலஞ்சென்ற புஷ்பராசா மற்றும் குகானந்தன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு. ப 08:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நீர்கொழும்பு வெஸ்டர்ன் மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 14-05-2025 புதன்கிழமை அன்று White house, 181 Main Street, Jaffna எனும் முகவரியில் மு.ப 08:00 முதல் 11:00 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கபட்டு அதனை தொடர்ந்து இறுதிக்கிரிகைகள் நடைபெற்று அங்கிருந்து அவருடைய பிறப்பிடமான புங்குடுதீவுக்குக் கொண்டு சென்று தகனக்கிரிகைகள் நடத்தப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மார்கஸ் - மருமகன்

    Mobile : +94714467825

சிவரூபன் - மகன்

    Mobile : +447501836515

 

Leave a Reply