சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு! அர்ச்சுனா எம்.பிக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை
இலங்கை
யாழ்.மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது, நிலையியற் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்தே சபாநாயகர் இந்த விடயத்தை சுட்டிகாகாட்டினார்.
சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தால் 72, 79 நிலையியற் கட்டலைகளின் படி தண்டனை வழங்க நேரிடும் என சபாநாயகர் கூறியிருந்தார்.
நிலையியற் கட்டளை கருத்து
இது குறித்து தெரியவருகையில்,
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சாமர சம்பத் தசனாயக்க வெளிப்படுத்திய கருத்தொன்றை ஹன்சாட் செய்யுமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார்.
இதன்போது நிலையியற் கட்டளைகள் குறித்து தனது கருத்தை வெளியிட்ட அர்ச்சுனா, நிலையியற் கட்டளையில் உள்ள விடயங்கள் பற்றி விளக்கம் இல்லாவிட்டால் இணையத்தில் சென்று பார்வையிடுமாறு குறித்த ஆளும் கட்சி எம்.பியின் கருத்துக்கு பதில் வழங்கினார்.
இதனை தொடர்ந்தே சபாநாயகர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.





















