அநுர அரசிடம் சிக்கியுள்ள ராஜபக்சர்களின் மறைக்கப்பட்ட இரகசியங்கள் - கலக்கத்தில் மகிந்த குடும்பம்
இலங்கை
சமகால அரசாங்கத்தின் சார்பான நபராக கோடிஸ்வர வர்த்தகர் நிமல் பெரேரா மாறியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜபக்சர்கள் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்த நபர்களில் ஒருவராக நிமல் பெரேரா உள்ளமையே இதற்கு காரணமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்வதற்கு முக்கிய காரணமாக நிமல் பெரேரா வழங்கிய சாட்சியமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம்
இந்நிலையில் ராஜபக்சர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒரு காலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் மிக நெருங்கிய நண்பராகவும் அவர்களது அனைத்து நிதி நடவடிக்கைகளையும் கையாண்டவராக நிமல் பெரேரா உள்ளார்.
நிமல் பெரேரா என்பவர் ராஜபக்சர்களின் அனைத்து இருண்ட இரகசியங்கள், மறைக்கப்பட்ட கணக்குகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து அனைத்தையும் அறிந்த தனித்துவமான நபராகும்.
அவர் தற்போது அவுஸ்திரேலியாவின் தீவிர பாதுகாப்பின் மத்தியில வசித்து வருவதுடன், நாமலுக்கு எதிராக தீர்க்கமான 2 சாட்சிகளையும் நீதிமன்றத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
நிமல் பெரேராவின் இந்தத் தீர்க்கமான நடவடிக்கையுடன் அவரைக் எப்படியாவது மௌனிக்க செய்ய சர்வதேச நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நடவடிக்கை
நாமல் ராஜபக்சவின் மற்றுமொரு மிக நெருங்கிய நண்பரான தற்போது மெல்பர்னில் வசிக்கும் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியாக செயற்படும் இந்திக கருணாஜீவ ஊடாக நிமல் பெரேராவுக்கு கடுமையான அழுத்தங்களைக் பிரயோகிக்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ராஜபக்சர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சியத்தையும் வழங்க வேண்டாம் என வேண்டிக்கொண்டு நிமல் பெரேராவுக்கு தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பல அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிமல் பெரேராவிடம் இருந்து நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் மட்ட விசேட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிய வருகிறது.























