• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முகநூலில் ஆபாச உள்ளடக்கம் பரப்பியதாக 21 வயது இளைஞர் கைது

இலங்கை

சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாசமான படங்களை வெளியிடும் முகநூல் (Facebook) குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், நேற்று (27) பெலியத்தை பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய இளைஞர் ஆவார்.

அவரது கையடக்கத் தொலைபேசி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத் தடுப்புப் பொலிஸ் பிரிவு ஆரம்பித்துள்ளது.
 

Leave a Reply