• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு

இலங்கை

நிலம் வாங்கியது தொடர்பான வழக்கு ஒன்றில் இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை மத்தறை பிரதம நீதவான் சதுர திஸாநாயக்க இன்று (21) மீண்டும் பிறப்பித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சரின் நான்கு பிணைதாரர்களுக்கு தலைமை நீதிபதி கடுமையான எச்சரிக்கை விடுத்து, பஷில் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மத்தறை, எலியகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில் (Browns Hill) பகுதியில், 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பானதாகும்.
 

Leave a Reply