கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்
இலங்கை
கட்டார் நாட்டிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (16) காலை இலங்கை திரும்பினார். இலங்கைவிசா
கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவு குறித்து, இலங்கை அரசாங்கத்தின் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவிப்பதற்காகப் பிரதமர் ஜூலை 14 அன்று கட்டாருக்குப் பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் தனது பயணத்தின்போது, கட்டார் நாட்டின் அமீரின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் (Qatar Foundation) தலைவருமான ஷேகா மோசா பின்ட் நாசரிடம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார் என்று பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கட்டாரின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான புதைனா பின்ட் அலி அல் ஜபர் அல் நுவைமியிடமும் பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.
இதற்கிடையில், பிரதமர் நேற்று (15) கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, ’ஃபாதர் அமீர்’ (முன்னாள் அமீர்) ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவு குறித்து, இலங்கை அரசாங்கத்தின் மற்றும் மக்களின் ஆழ்ந்த அனுதாபங்களை பிரதமர் அமரசூரிய அவர்கள் அமீருக்குத் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைவிசா





















