• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானில் தூக்கிலிடப்பட்ட இரு Mossad உளவாளிகள்

ஈரான் போரின் போது, இஸ்ரேலின் 'மொசாட்' (Mossad) உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகக் கூறப்பட்ட இருவர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் நெருங்கிய தொடர்புடைய 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனத்தின் மூலம், இவர்கள் யாகூப் கரீம்பூர் (Yaqoub Karimpour) மற்றும் நாசர் பெகெர்சாதே (Nasser Bekerzadeh) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில், நாசர் பெகெர்சாதே என்பவர் "முக்கிய அரசாங்க, மத மற்றும் மாகாணப் பிரமுகர்கள்" பற்றிய விபரங்களைச் சேகரித்ததாகவும், நாட்டின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள நடான்ஸ் (Natanz) பிராந்தியத்தின் முக்கிய மையங்கள் பற்றிய தகவல்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, யாகூப் கரீம்பூர் என்பவர், மொசாட் அதிகாரிகளிடம் முக்கிய மற்றும் இரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் குற்றம் ப்பட்டுள்ளது.
 

Leave a Reply