கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்
இலங்கை
பதுக்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (5) இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 12 மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான வானிலை மற்றும் அப்பகுதிக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால் இந்த இடைநிறுத்தம் செயல்படுத்தப்படுவதாக NWSDB தெரிவித்துள்ளது.
நீண்டகால வறட்சியான வானிலையால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், பதுக்கை, ஹோமகமை, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளைப் பாதிக்கும் ஒரு பரந்த நீர் மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நீர் விநியோகக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இடைநிறுத்தக் காலத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், போதுமான அளவு தண்ணீரைச் சேமித்து வைக்குமாறும் வலியுறுத்தப்பட்டள்ளது.
எதிர்வரும் வரும் நாட்களில் வானிலை நிலவரங்கள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைப் பொறுத்து மேலும் விநியோக மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.























