எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி
இலங்கை
மார்ச் 17 அன்று தொடங்கப்பட்ட கேள்வி மனுக்கோரலின் (டெண்டர்) அடிப்படையில் இலங்கைக்கு வந்து சேரவிருக்கும் எரிபொருள் ஏற்றுமதிகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
அதன்படி, டீசல் பொருட்கள் ஏப்ரல் 6 அல்லது 7 ஆம் திகதியும், பெற்றோல் பொருட்கள் ஏப்ரல் 16 அல்லது 17 ஆம் திகதியும் நாட்டை வந்து சேரும் என்று அவர் தெரிவித்தார்.
உலை எண்ணெய் (Furnace oil) ஏப்ரல் 12 அல்லது 13 ஆம் திகதியும், ஜெட் ஏ-1 எரிபொருள் ஏப்ரல் 10 அல்லது 11 ஆம் திகதியும் வந்து சேரும் என்று அவர் மேலும் கூறினார்.
ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் மசகு எண்ணெய் ஏற்றுமதிக்கான டெண்டர்கள் திறக்கப்பட்டன.
ஆனால் ஏப்ரல் மாதத்திற்கான கோரப்பட்ட ஏற்றுமதிக்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
எனினும், ஜூன் மாதம் மசகு எண்ணெய் ஏற்றுமதிக்காக வெளியிடப்பட்ட டெண்டரை நிறுவனங்கள் அணுகியிருந்தன, அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் உள்ள டீசல் ஏற்றுமதிக்கான டெண்டர்கள் மார்ச் 18 அன்று மீண்டும் திறக்கப்பட்டதாகவும், அவ் விநியோகம் ஏப்ரல் 08 அல்லது 09 அன்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜைரா எண்ணெய் மையத்திலிருந்து வரும் பொருடகள் தாமதமாவதால், புதிய குறுகிய கால ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.
90,000 மெட்ரிக் தொன்கள் எரிபொருள் அடங்கிய அத்தகைய இரண்டு கப்பலின் வருகையும் தாமதமாகியுள்ளன.
மேலும் 90,000 மெட்ரிக் தொன்கள் கொண்ட மற்றொரு கப்பலின் வருகையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், எரிபொருள் விநியோகப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.






















