• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு

இலங்கை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுந்த பைபிள் பிரச்சினைக்கு சரியான தீர்வினை கூறியதாக தெரிவித்து யாழ்ப்பாணம் தலைமை காரியாலய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் அனுமதியளித்த நிலையில் அதற்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமை காரியாலயத்தில், சிவசேனை அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நீதியாக இடம்பெற்றதாக சிவசேனை அமைப்பினரால் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நீதியான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, சிவசேனை அமைப்பினரால்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
 

Leave a Reply