• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு

இலங்கை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக குமாரி லியனகே தெரிவித்தார்.

முடிவுகளை வெளியிடுவதற்கான தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விமானத்தாள்கள் திருத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக ஆணையளர் மேலும் குறிப்பிட்டார். 

சாதாரண தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகளை ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடைமுறைப் பரீட்சைகள் முடிந்தவுடன் சாதாரண பரீட்சை முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Leave a Reply