மிரட்ட ரெடியாகும் டிமான்டி - புது அப்டேட் வெளியீடு
சினிமா
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இந்தப் படமும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக மாறியது.
உலகளவில் டிமான்டி காலனி 2 திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தையும் உருவாக்கி இருக்கிறது. இந்தப் பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படம் வருகிற மே மாத வாக்கில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு நிலையில், டிமான்ட்டி காலனி 3 திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை உணர்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், டிமான்டி காலனி 3 படத்தின் லைப்ரரியன் நாளை (மார்ச் 17) மாலை 5.01 மணிக்கு வருவதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே ரூ.50 கோடி வசூலித்துள்ளதாகவும், படத்தின் ஆடியோ உரிமத்தை டி சீரிஸ் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி. உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் ஜீ5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.





















