• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை

இலங்கை

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையின்கீழ் வழங்கப்படவுள்ள எரிபொருள் அளவு போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய QR முறையின்கீழ் முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்வகையிலும் போதுமானதாக இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமது வீடுகளில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தரநிலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாக வைத்தியர்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போதைய ஒதுக்கீட்டு அளவைக் கொண்டு கடமைக்குச் செல்வது கூட சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த சுகாதார சேவையின் வினைத்திறனைப் பாதிப்பதோடு, நோயாளிகளுக்கான சிகிச்சைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவையாளர்கள் எதிர்கொள்ளும் இந்த நடைமுறைச் சிக்கல்களை அரசாங்கம் உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான கூடுதல் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு விரைவான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 

Leave a Reply