• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடகொரியா புதிய பலிஸ்டிக் ஏவுகணை சோதனை - ஆட்டம் காட்டும் அதிபர் கிம்

வடகொரியா இன்று பலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது,

ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏவுகணை கடலில் வீழ்ந்துவிட்டதாகவும், அது ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக நம்பப்படுவதாகவும் அமைச்சு கூறியது.

ஜனவரி 27 அன்று இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா ஏவியதன் பின்னர் , அணு ஆயுதம் ஏந்திய வடகொரியாவின் முதல் ஏவுகணை இதுவாகும்.

அதேவேளை வளைகுடா போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளமை பேசுபொருளாகியுள்ளது.  
 

Leave a Reply