திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
இலங்கை
திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று காலை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன் கிழக்கு மாகாண ஆளுனரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
குறிப்பாக நீண்ட காலமாக சேவையாற்றும் ஆசிரியர்களைக் கருத்திற் கொண்டு 60 வயதிற்கு மேல், அவர்களை ஓய்வு பெறச் செய்யும்போதுஈ அவர்களுக்கான உதவுத் தொகையையும் வங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முள்பள்ளி ஆசிரியர்களுக்கும் தரமான அடையாள அட்டையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.























