• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாகந்துர மதுஷ் கொலை தொடர்பாக சிஐடி விசாரணை

இலங்கை

கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் இருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் மாகந்துரே மதுஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சம்பவம் நடந்த நாளில் மதுஷை மாளிகாவத்தைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று சிஐடி தெரிவித்துள்ளது.

2020 ஒக்டோபர் 20 ஆம் திகதி மாளிகாவத்தையில் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மதுஷ் கொல்லப்பட்டார். 

அந்த நேரத்தில், போதைப்பொருள் இருப்பு பற்றிய தகவலை அவர் வழங்கியதாகக் கூறப்பட்டதை அடுத்து, கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.

புதிய விசாரணைக்கான கோரிக்கையை மதுஷின் சகோதரர்களில் ஒருவர் முன்வைத்தார்.

அவர் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் ஒரு மேல்முறையீட்டைச் சமர்ப்பித்தார்.

அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸார் இந்த விடயத்தை மேலதிக விசாரணைக்காக சிஐடிக்கு பரிந்துரைத்தது.

இவ் விசாரணைகள் குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் வாக்குமூலம் பெறுவதற்கும், ஊடக நிறுவனங்களிடமிருந்து குறித்த படுகொலை தொடர்பான காணொளிக் காட்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 

Leave a Reply