ஈரானின் தலைமை அழிக்கப்படும் வரை போர் தொடரும்
இலங்கை
இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எனக்கு ஆர்வம் இல்லை. ஈரானில் இராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதியுள்ள எந்த தலைமையும் இல்லாதபோதுதான் போர் முடிவடையும். ஈரானின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்ய விரும்புகிறேன்.
அமெரிக்காவை போருக்கு இட்டுச் செல்லாத தலைவரை தெரிந்தெடுக்க விரும்புகிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
























