• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மத்திய கிழக்கு போர் அபாயம் குறித்து புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பிராந்திய மோதலாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளின் நான்கு முக்கிய தலைவர்களுடன் அவர் உரையாடியுள்ளார்.

சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் புடின் மேற்கொண்ட உரையாடலுக்குப் பிறகு கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் "ஏற்கனவே பல அரபு நாடுகளின் எல்லைகளைப் பாதித்துள்ள இந்த மோதல் மண்டலம் மேலும் விரிவடையும் அபாயம் குறித்து இரண்டு தலைவர்களும் கவலை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகள் குறித்தும் இரு தரப்பினரும் கடும் கவலை தெரிவித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையை" கையாள இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம் என்று புடின் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் ரஷ்யா கொண்டுள்ள நல்லுறவு காரணமாக மொஸ்கோ இந்த விவகாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மை கொண்ட பங்கை வகிக்க முடியும் என்று சவூதி இளவரசர் தெரிவித்தார்.

இந்தநிலையில், புடின் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பேசினார்.

"இரு தரப்பினரும் விரோதப் போக்கை நிறுத்திவிட்டு அரசியல் மற்றும் இராஜதந்திர செயல்முறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

கட்டாரின் தலைவர் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் மேற்கொண்ட அழைப்பின் போது, மத்திய கிழக்கில் மோதல் விரிவடையும் அபாயம் மற்றும் இதில் மூன்றாம் நாடுகள் இழுக்கப்படும் ஆபத்து குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்ததாக கிரெம்ளின் கூறியுள்ளது. அதேநேரம், ரஷ்ய ஜனாதிபதி, பஹ்ரைன் மன்னருடனும் உரையாடினார். 
 

Leave a Reply