• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

இலங்கை

யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட பதாகையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி ஒட்டி இருந்தனர்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மண்டப வாயிலில் உள்ள பதாகையில் தமது பிரார்த்தனை துண்டு சீட்டுக்களை ‘பின்’ பண்ணி வைத்திருந்தார்கள்.
 

Leave a Reply