• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

லிந்துலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று இன்று குளவி குட்டுக்கு இலக்காகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 61 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐந்து பேர் லிந்துலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருந்த ஏனையவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply