• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல் - லெபனான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை - அமெரிக்கா அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான அடுத்தகட்ட அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தூதரகப் பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 4 முதல் 6 ஆம் திகதி வரை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவது குறித்து இரு நாடுகளின் தொழில்நுட்பக் குழுக்கள் இதில் கவனம் செலுத்தும்.

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட 'சோதனை மண்டலங்களை' மேலும் விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.

நிலுவையில் உள்ள எல்லைத் தகராறுகளுக்குத் தீர்வு காண்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான அமைதி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் படி, கட்டம் கட்டமாகச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, லெபனான் ராணுவம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தனது இறையாண்மையையும் கட்டுப்பாட்டையும் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே, தெற்கு லெபனானில் இருக்கும் இஸ்ரேலியப் படைகள் படிப்படியாகத் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பப் பெறப்படும்.

முதற்கட்டமாக இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதற்காக இரண்டு 'சோதனை மண்டலங்கள்' அடையாளம் காணப்பட்டு, அமைதி முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply