• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெவினுவர பெரஹேராவிலிருந்து காவடியை நீக்க பொலிஸார் பரிந்துரை!

இலங்கை

தெவினுவரவில் உள்ள உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தில் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹேராவிலிருந்து காவடி நடனத்தை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரைத்துள்ளது.

காவல்துறைத் தலைவர் பிரியந்த வீரசூரிய வழங்கிய இவ்விவகாரப் பரிந்துரையை, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன இன்று (26) உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் பஸ்நாயக்கவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தேவினுவர விஷ்ணு தேவாலயத்தின் பெரஹேரா தற்போது நடைபெற்று வருகிறது.

காவடி நடனத்துடன் கூடிய பெரஹேரா 28ஆம் திகதி நடைபெற உள்ளது.
 

Leave a Reply