லண்டன் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர் - 8 மாதம் கழித்து வந்த அதிர்ச்சி தகவல்
லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டல் அறையின் குளியலறையில் மயங்கிக்கிடந்த இளவரசரை ஹோட்டல் ஊழியர் கண்டுபிடித்து அவசர உதவிக்கு அழைத்துள்ளார். இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஆபத்தான அளவில் ஜி.எச்.பி போதைப்பொருள், கானபியா மற்றும் ஜானக்ஸ் போன்ற மாத்திரைகளும் கலந்திருந்தன.
இந்த நச்சுப் பொருட்களின் அதிவேக கலவையே அவரது திடீர் மாரடைப்புக்குக் காரணம் என மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன் அவர் மது மற்றும் மருந்து அடிமைத்தனத்துக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், இது ஒரு எதிர்பாராத விபத்து மரணம் என்றும் உதவி coroner ஜீன் ஹார்க்கின் தீர்ப்பளித்துள்ளார். இதனையடுத்து சவுதி அரச குடும்பத்தினர் அவரது மறைவை உறுதிசெய்து, இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.





















