• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

இலங்கை

செம்மணி புதைகுழிக்குள் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள் தெரிந்திருந்தால், அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு நேற்றையதினம் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் , அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் , நீதிமன்ற பதிவாளருக்கோ , சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்கோ , காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள் சில வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply