• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எங்கள் தங்கம் நூறாவது நாள் விழா

சினிமா

இதில் வித்தியாசமான கெட்டப்பில் எம்.ஜி.ஆர் தோன்றும் ‘கதாகாலட்சேபம்’ பாடல் அப்போது அதிகம் ரசிக்கப்பட்டது.

‘நான் அளவோடு ரசிப்பவன்’ பாடலை எழுதும்போது, அடுத்த வரி வரவில்லை கவிஞர் வாலிக்கு. அப்போது அங்கு வந்த கருணாநிதியிடம், முதல் வரியை படித்துக் காட்டினார், வாலி. அடுத்தவரியாக, ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என்றார்கருணாநிதி. பிரமாதம் என்று சொல்லிவிட்டு அந்தப் பாடலை உடனடியாக எழுதி முடித்திருக்கிறார் வாலி. பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர், அந்த வரிக்காக வாலிக்கு முத்தம் கொடுக்க, ‘அதைச் சொன்னது கருணாநிதிதான், இந்த முத்தத்தை நீங்கள் அவருக்குத்தான் கொடுக்கணும்’ என்றார் வாலி.

எம்.ஜி.ஆர் சம்பளமே வாங்காமல்நடித்த படம் இது. சிறந்த படத்துக்கான தமிழக அரசின் இரண்டாவது பரிசைப்பெற்றது படம். இந்தப் படத்துக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார் வாலி.

பல திரையரங்குகளில் நூறு நாள்ஓடியது. நூறாவது நாள் விழாவில் பேசிய கருணாநிதி, “கர்ணன், கேட்டால்தான் கொடுப்பார். எம்.ஜி.ஆர் திராவிட கர்ணன். கேட்காமலேயேகொடுப்பார். கொடுத்து கொடுத்து சிவந்த கை அவருடையது. அதனால்தான் அவர் வீடு அமைந்திருக்கும் மாவட்டத்துக்கே ‘செங்கை’ என்றுபெயர் வந்துள்ளது’’ என்றார். (எம்.ஜி.ஆர்.வீடு இருந்த ராமாவரம் தோட்டம் அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது). அதே விழாவில் பேசிய முரசொலி மாறன், “எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில் சம்பளம்வாங்காமல் நடித்துக் கொடுத்து, படம் வெற்றிபெற்றதால்தான் கடனில் இருந்து எங்கள் குடும்பம் மீண்டது” என்று தெரிவித்தார்.

Sukumar Shan

Leave a Reply