• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை

இலங்கை

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றத்திற்கு வராமல் தலைமறைவாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) மற்றொரு பிடியாணையைப் பிறப்பித்தது.

இந்த வழக்கு தொடர்பாக சட்டத்துறைத் தலைவரிடம் ஆலோசனை பெற்ற பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, டிசம்பர் 9ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
 

Leave a Reply