• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெல்லுக்கான விலையை அதிகரிக்க கோரி மட்டக்களப்பில் போராட்டம்

இலங்கை

நாட்டில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான கேள்வி குறைந்துள்ள நிலையில், தமது நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரி, அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் இன்று முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மாவட்ட விவசாயிகள் ஒன்றினைந்து, நெல்லுக்கான நியாயமான விலையினை நிர்ணயிக்குமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக, அறுவடை செய்துள்ள தமது நெல்லினை அரசாங்கம் கொள்வனவு செய்வேண்டும் எனவும் நெல்லிற்கான விலையை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான கேள்வி குறைந்துள்ள நிலையில், தமது நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரி, அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் இன்று முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மாவட்ட விவசாயிகள் ஒன்றினைந்து, நெல்லுக்கான நியாயமான விலையினை நிர்ணயிக்குமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக, அறுவடை செய்துள்ள தமது நெல்லினை அரசாங்கம் கொள்வனவு செய்வேண்டும் எனவும் நெல்லிற்கான விலையை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 

Leave a Reply